காதல் டைரி

-------------

காதலின்
ஆழத்தை அளவிட
முடியாது என்றாய்..

அன்று விழுந்தவன்..
இன்னும் எழவில்லை..

அளந்து
கொண்டேயிருக்கிறேன்..

-

முன்னுக்கு
வர கடின உழைப்பு
தேவை என்று
யார் சொன்னது..

நீ
உழைக்காமலே
என் கண் முன்
எப்பொழுதுமாய்..

-

காதலின்
நீளம், அகலம்
தெரியுமா ??

அன்று
விளையாட்டை
நீ
கேட்ட
கேள்விக்குபதில்..

இன்று
வினையாய்..

நீளம்...
நம் இருவருக்கும்
இடையில்
இருக்கும்
மௌனம்..

அகலம்..
நம்
இருவருக்கும்
இடையில்
இருக்கும்
தூரம்..


-

என்
கனவை
கலைத்தது
யார்...??

நீயே
என்றாலும்
கோபப்படாமல்
இருக்க
முடியாது..

கனவில்தான்
கவிதை
சரளமாக வருகிறது...

-

என்
முன்னோர்கள்
பெரும் தவம்
செய்திருக்க வேண்டும்..

உன்னை
என் வம்சா வழியில்
இணைத்துக்கொண்டதற்கு....

-

நிலவிலிருந்து
பார்த்தால்
சீனப்பெருஞ்சுவர்
தெரிகிறதாமே

நான்
பார்த்தால்..

இன்னொரு
நிலவு
தெரிகிறது
என்பேன்..

-

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
Comments:
நன்றி மூர்த்தி.
 

Post a Comment

<< முகப்பு

This page is powered by Blogger. Isn't yours? Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது தேன்கூடு, தமிழ் வலைப்பதிவுகளின் திரட்டி http://ta.wikipedia.org