காதல் டைரி - 3

-

கட்டுப்பாடு
இல்லாமல்
திரிந்த
என்னை

கட்டுபடுத்தி
அழகு பார்த்தது
உன்
அன்பு

கட்டுங்கடங்காமல்
செல்லும்
என் காதலை

கொட்ட
முடியாமல்
தடுப்பதும்
உன்
அன்பு...

-

எதிரெதிரே
கடந்து
செல்கையில்

புன்னகையை
மட்டுமே
பரிமாறிக்கொண்டு
கடந்து
வந்த காலங்கள்..

சட்டென
ஒரு தடவை
நான்
நின்று விட..

ஒண்ணுமே புரியாமல்
நீயும்
நிற்க..

கண்கள்
பேசிக்கொண்ட
அந்த வினாடிகள்..

காதலின்
அஸ்திவார
துளிகள்...
-

ஒரு
தேர்வு
நாளில்

எதேச்சையாக
அருகருகே
நாம்.

நீ
பிள்ளையார்
சுழி போட்டு
தேர்வை
ஆரம்பித்தாய் ...

சுழிக்குள்
மாட்டுக்கொண்டு
தவிக்கிறேன்..
நான்.

-

கல்லூரி
விழாக்களில்
நடனம் ஆட
அழைத்த போது..

பல தடவை
மறுத்திருக்கிறாய்..
என்னிடம்
கோபம் கொண்டாய்.

அனைவரின்
முன்பு ஆட
நடிகை உண்டு.

நான் உன்
முன்பு மட்டும்தான்
ஆடுவேன் என்றாய்..

எங்கே ஆடிக்காட்டு
என்றேன்...

அன்று
ஆடினாய்..

ஆடிப்போனவன்
நான்..

-


எதற்கெடுத்தாலும்
உதட்டை
சுழிக்கிறாய்...

என்
மனது
சிலிர்க்கிறது...

நீ
உதட்டை
பிதுக்குகிறாய்..

என்
இதயம்
திறக்கிறது..

நீ
உதட்டை
கடிக்கிறாய்..

என்
மனது
காயப்படுகிறது..

நீ
இப்படி
எல்லாவற்றிற்குமாய்
உதட்டால்
பேசுகிறாய்..

நான்..
பதிலளிக்க
தெரியாமல்..
பல்லிளித்து
மௌனமே பதிலாய்........

-

கல்லூரி
முடிந்து கடைசி
நாளில் கண்ணீரோட
பிரிய பட்டோம்..

அதற்கு முன்
ஒன்றாய்
சேர்ந்து புகைப்படம்
எடுத்துக்கொள்ள
பிரியப்பட்டோம்..

என்னிடம்
இருக்கும்
புகைப்படத்தை
பார்ப்பவர்கள்
எல்லாம்

உன்னை காட்டியே
யாரிவள்
என்று கேட்கின்றனர்..

பல
பேருக்கு மத்தியில்
இருக்கும் உன்
முகம் மட்டும்
பிரகாசமாய் ஏன்.

காரணம்
கேட்டவர்களிடம்
சொன்னேன்..

அப்பொழுது
அவளிடம்
காதல் இருந்தது..

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

This page is powered by Blogger. Isn't yours? Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது தேன்கூடு, தமிழ் வலைப்பதிவுகளின் திரட்டி http://ta.wikipedia.org