காதல் டைரி - 2

குற்றம்
புரிந்தவர்
வாழ்க்கையில்
நிம்மதி...

காதல்
புரிந்தவர் ???

-

மொழி
முக்கியமா.
காதல்
முக்கியமா..

என் வீட்டில்
நீ பேசப்போவது
எம் மொழி
என்றாய்...

நான்
நம்
காதல் மொழி
என்றேன்..

கடைசியில்
என் மொழியை
நீ
ஏற்றுக்கொண்டது

என்
காதலை
ஏற்றுக்கொண்டதை
விட மேல்

-

நிம்மதிக்காக
கடவுளை
தேடி

காடு
மேடெல்லாம்
சுற்றி..

கடினமான
பயண
களைப்பு...

வீடு
திரும்பியதும்
தருவாயே

ஒரு
ஃபில்டர் காபி..
காதல் நுரை
பொங்கி
வழிய..

-

வெறும்
சௌக்கியமாவில்
ஆரம்பித்த
நம் நட்பு..

இன்று
ஒருவருக்குள்
மற்றவர்
ஐக்கியமாகி

-
தட்டுச்சு
செய்யும்போது
உன்

பெயரில் உள்ள
எழுத்துக்களை
மட்டும்
என் விரல்கள்
தட்டுகின்றன...

படிக்கும்போது
என்
விரல்கள்
உன் பெயரில்
உள்ள
எழுத்துக்களை
சுற்றி வட்டமிடுகின்றன

ஆனாலும்
உன்
முகம் நோக்கி
பேசுகையில்
வார்த்தைகளை
தேடிப்பிடிக்க
கஷ்டப்படுவது
ஏன் பெண்ணே...

-

எனக்கு
பிடித்த
கவிதை
நீ

உனக்கு
பிடித்த
கவிதை
நான்.......

நமக்கு
பிடித்த
ஹைக்கூ
காதல்......



--

சொட்ட
சொட்ட
நனைந்த
ஒரு
மழைநாளில்..

திட்டு
திட்டாய்..
மனதில்
ஆசைகள்
எழும்பும்..

இன்று
நினைத்து
பார்க்கையில்
இனிமையாய்..

நல்லவேளை
பொழுதை
கெடுத்து
விடவில்லை....

-

எனக்கு
அன்று தெரிந்திருக்க
வாய்ப்பில்லை

இன்று
உன்னை பற்றி
கவிதையாய்

தீட்டும்
போதுதான்
தெரிகிறது.

உன்னை
பற்றி
எழுதி எழுதியே

என்
காலமெல்லாம்
கழிந்துவிடும் என்பது...


-

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
Comments:
மிகவும் அருமையான கவிதை இன்னும் இன்னும் ஒயாது எழுதுங்கள் எழுத என் வாழ்த்துக்கள்!
 

நன்றி சுவேதா..
 

Post a Comment

<< முகப்பு

This page is powered by Blogger. Isn't yours? Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது தேன்கூடு, தமிழ் வலைப்பதிவுகளின் திரட்டி http://ta.wikipedia.org